பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 ‘முக்கியமாக அவரைத்தான் பார்க்க வந்திருக்கிறேன். வெளிநாட்டு மூலதனம் கொண்டு வந்து தொழில் நடத்த அனுமதி தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்.

அளகாபுரியில் இருந்து குபேரன் ஒரு செய்தி சொல்லி அனுப்பினார். அவர் நடத்தும் உலக வங்கியில் இருந்து நிறைய மூலதனம் அள்ளித்தந்திருக்கிறார். தமிழ் நாட்டில் இப்பொழுது நிறைய புராணப்படங்கள் எடுக்கிறார் களாமே அது போல் ஒரு படம் எடுத்துக் கொண்டு வர அனுப்பி இருக்கிறார்’.

நாரதர் சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது அவர் வள்ளித்திருமணம் சகதலப்பிராதபன் காலத்தில் இருக்கிறார் என்று நினைத்தார்கள்.

‘புராணப் படங்களா திருவிளையாடற் புராணம் - எடுந்தோமே அதைச் சொல்கிறீர்களா'’

‘'அது இல்லை இன்று ராட்சதர்களுக்கும் தேவர்களும் கும் போராட்டத்தை எடுக்கிறீர்களாமே”

‘'அப்படி எல்லாம் இல்லையே'