‘நவ நாகரிகப் பெண்மணி’ என்று விளக்கம் தந் தான்.
‘பெண்மணி நீ என் கண்மணி’ என்று சொல்லி விட்டு நீங்கினான்.
அவனை அவள் விடவில்லை; ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்றாள்.
‘உடனே இவன் அழத் தொடங்கினான். ‘ஏன் அழறீங்க’ என்று கேட்டாள்.
‘அப்புறம் உன்னைக் கட்டிப்பிடிக்கச் சொல்வாய். அப்புறம் டியூட் ஆடவேண்டும் என்பாய்; கடலோரக் கவிதைகள் பாடச்சொல்லாய்’ என்றான்.
‘சாரி ; உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன். நான் வேறு ஆளைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள்.
மறுபடியும் பெண்மணி அவள் என் கண்மணி என்று முணுமுணுத்தான்
‘என்ன மறுபடியும்’ என்று மிரட்டினாள்.
இது சினிமாப்பாட்டு விசு’ பாடியது என்று விளக் கம் தந்தான்.
அவள் சிரித்துக்கொண்டே போனாள்
அந்தப் பெண்ணைப் பார்த்ததிலேயிருந்து அவளைக் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. அவனுக்கு அவள் விரித்த கூந்தலும் சிரித்த முகமும் பிடித்து இருந்தது.
‘அப்பா நான் கலியாணம் பண்ணிக்கப் போறேன் என்றான்
‘படிடா ; கலியாணத்துக்கு என்ன அவசரம் என்று கேட்டார்.