பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 53 கூற்றுவரும் இழவகத்தே கூட உன்னைக் கூடாமற் செய்துவிட்ட கோலங் கண்டு நேற்றுவரை போராடிப் போரா டித்தான் நெஞ்சுறுதி பெற்றுவரு கின்ருேம் தாயே! பூக்காட்டில் பூமணக்கும் புதுமை யில்லை! பொன்னிநதிக் கரைதனிலே மாம ணக்கும்! சாக்காட்டில் வீரர்திருப் புகழ் மணக்கும்! சங்கத்துப் பாடல்களில் மணக்கும் காதல்! நோக்காட்டில் வீழ்ந்தவர்க்கோ மருந்தின் நாற்றம் நொடி தோறும் கவலையினை அதிக ரிக்கும்! வாக்காடிப் பயனில்லே தமிழ றிந்தோர் வழிபற்றித் தமிழகத்தை நடக்கச் செய்வோம்! கவிந்திருக்கும் இருள்முற்றும் விலக வில்லை! கதிரொளியின் அறிகுறிதான் தோன்றிற்றிங்கே! குவிந்திருக்கும் தமிழ்ச் சிங்கக் கூட்டத்திற்கோ குறிக்கோளைக் காட்டிவிட்டாற் போதும் வெம்பி அவிந்திருக்கும் தமிழுள்ளம் ஊட்டம் பெற்றே ஆர்வமுற மறுமலர்ச்சி யடைய வையம் புரிந்திருக்கும் தமிழறிஞர் வழிந டப்போம் புத்துலகம் படைத்திடுவோம்! இதுமெய் மெய்யே!