பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தாச்சியப்பன் அமுதுண்ணும் பெருநாள் தமிழனுக் கொரு திருநாள்- பொங்கல் அமுதுண்ணும் பெருநாள் தமிழனுக் கொரு திருநாள் ! தமிழ னென்ற உணர்ச்சி யோடு அமைதி அன்பு அறிவு கொண்ட தமிழனுக் கொரு திருநாள் ! உழைத்த உழைப்பின் பயனைக் கண்டு விளைத்த செந்நெல் வீட்டில் கொண்டு அழைத்த விருந்து மனைவி மக்கள் அனைவரோடுங் கூடி யுண்ணும் தமிழனுக் கொரு திருநாள் ! மூன்று வேந்தர் ஆண்ட நாட்டில் முத் தமிழ்க் கலை யார்ந்த நாட்டில் தோன்றி வந்த பெருமை யோடு தோள் புடைத்து வீரம் பேசும் தமிழனுக் கொரு திருநாள்! அவனி முற்றும் பெருமை நாட்டும் அருமைக் குறளும் புலவர் பாட்டும் உவகை யோடு பாடிக் காதல் ஒருத்தி யோடு கூடி வாழும் தமிழனுக் கொரு திருநாள் !