பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நாச்சியப்பன் கீழ்ச்செயல்கட் கஞ்சாத பகைவர் தங்கள் கெடுதல்செயும் நினைப்பினையும் செயலில் அன்னர் சூழ்ச்சிசெயும் திறத்தினையும் கண்ட மக்கள் உளங்கொதித்தார், வெகுண்டெழுந்தார், ஊரிலெல்லாம் வீழ்ச்சியுற்ற தமிழர்நிலை விளக்கிக் காட்டி வீணான வேற்றுமைகள் விலக்கச் சொல்லிச் சூழ்ச்சிதன்னை வஞ்சகத்தைப் பொருமை தன்னைத் து.ாள்துள்ளாய்த் தொலைப்பதற்குத் தொடங்கிவிட்டார் பகைவர்களை எச்சரிக்கும் ஒருநாளாகப் பாண்டியரின் வழிவந்த தமிழ மக்கள் மிகையான மகிழ்ச்சியிலே திளைத்தி ருக்கும் மேலான ஒருநாளா யிலங்கு கின்ற; வகைவகையாய்த் தானியங்கள், கரும்பு மஞ்சள் வண்டிவண்டி யாய்க்குவியும் வளங்க ளார்ந்த வகைசெய்யும் நன்னளைப் பொங்கல் நாளே வாழ்த்தியவர் திருநாளாய்க் கொள்ள லானர் ! கழகங்கள் பலவ்மைத்தார் செயல்க ளாற்றக் கடிதிளைஞர் பல்லோரும் துணிந்து வந்தார் உளமார்ந்த தொண்டாற்றி யூர்கள் தோறும் உயர்த்துகின்ருர் செந்தமிழை வான ளாவ ! பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டு மக்கள் பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் காத்து நிற்கக் குழைந்தபொங்கல் ஏந்திவந்து தமிழ மங்கை குமரருக்கும் செல்வியர்க்கும் படைக்க லாள்ை !