பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாச்சியப்பன் பொங்கல் வாழ்த்து தோரணங் கட்டினர் துள்ளித் திரிந்தனர் நேற்றுத் தோன்றிய காளைகளே ! ஆரணங் குகளோ கோலம் வரைந்தனர் இன்பத் தாடினர் பாடினரே ! பூரண இன்பம் பெற்று மகிழ்ந்தனள் தாய் பொங்கல் படைத்தனளே ! ஆrமு துண்டனர் தந்தை யுவந்தனன் அன்புக் குடும்பம் வாழியவே ! ★ ஆணும் பெண்ணும் கூடி வாழும் இன்ப வாழ்விலே ஆனந் தத்தின் உச்சி யான பொங்கல் நாளிதே வேண மட்டும் கரும்பு தின்று மகிழ்ந்தி ருக்கலாம் விலாப் புடைக்கச் சோறு பொங்கி யுண்டிருக்கலாம் காணக் காண இன்ப மாகப் பெண்கள் கூடியே கையி கணத்துக் கும்மி பாடும் போதில் உள்ளமே வேணும் பொங்கல் விழாக்கள் நாளும் வேணு மென்றுதான் - விரும்பு தையா அரும்பு மின்பப் பொங்கல் வாழியே !