பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நாச்கியப்பன் சூது பொருமைகள் சூழ்ந்த பட்டியல் துண்டு துண்டாகக் கிழிந்ததடி ! மோதுப்பகைகள் துTளாய்ப் பறந்தன ! முற்றிலும் இன்பம் நிறைந்ததடி ! அண்ணன் தம்பியர் அன்பில் இணைந்தனர் ஆயிரம் வெற்றிகள் குவிந்ததடி ! திண்ணம் வாய்மையே வெல்லும் என்றிடும் தேன் மொழி யோங்கி நிலைத்ததடி ! நெல்லும் மணியும் பொன்னும் பொருளும் நிறைந்து விளங்கும் தைத்திருநாள் ! நல்ல கருத்தும் வாழ்த்தும் வழங்கி நாடு களிக்கும் தைத்திருநான் ! அன்னையர் கூடி அன்பு தழைத்திட அமுதம் வழங்கும் தைத்திருநாள் ! தன்னை யுணர்ந்து தலை நிமிர்ந்திடும் தமிழர்க் கினிய தைத்திருதாள் !