பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 53 எது என்ன ஆலுைம் (அழுகிணிச் சித்தர் பாட்டு மெட்டு) வடக்கு மொழியடியோ வாழ்விழந்த இந்திதனை இடக்குத் தனத்தாலே இங்குவந்து புகுத்துகின்ருர் ஒடுக்கும் அதிகாரம் உண்டென்ற விருப்போ ? துடிக்கும் தமிழர் முன்னே என்கண்ணம்மா - அது தூளாகிப் போகாதோ ? அதிகாரம் உண்டென்ற ஆணவத்தால் இந்திதனை சதிகாரர் கொண்டுவந்து தமிழ் நாட்டில் நுழைப்பாரேல் விதிதானே என்று சொல்லி வெகுளாமல் இருப்பாரோ ? அதிகார வெறி யொழித்தே என் கண்ணம்மா - அவர் ஆணவந்துாள் ஆக் கோமோ ? புதுடில்லிப் பட்டணத்தான் போட்டதெல்லாம் . சட்டமென்ருல் அது இங்கே பலித்திடுமோ ? ஆணவமும் நிலைத்திடுமோ ? எது என்ன ஆலுைம் இந்திவர விடமாட்டோம் அது முடியா தென்றுவிட்டால் என் கண்ணம்மா - நாம் அனைவரும் செத் தொழியோமோ ? நோக்கம் அறிந்தேதான் நுழைப்போம் இந்தியென வாக்குக் கொடுத்தவரும் வாய்மாறிப் போனலும் ஊக்கம் தளராமல் ஒன்ருகிப் போரிட்டால் வாக்கும் நிறைவேறி என் கண்ணம்மா - மன வாட்டந் தான்தீராதோ ?