பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 6? புகைவண்டி நிலையங்கள் எல்லாம் - இந்தி புகுந்ததும் தமிழர்கள் வெகுண்டெழ வில்லை மிகையாக அஞ்சல் துறையில் - இந்தி மேன்மேலும் வந்தது நாமெழ வில்லை. பள்ளிக் கூடத்தி லெல்லாம் - விருப்பப் பாடமென் றதனைக் கூடவே சேர்த்தார் துள்ளிப் போர்க் கெழ வில்லை - அதைத் தொலைத்திட அன்றே தலைப்பட வில்லை ! ஆட்சி மொழி யென்று சொன்னர் - தமிழர் ஆர்ப்பரித் தெழுந்து போர்ப்படை திரட்டி வீழ்ச்சிப் படுத்திட வில்லை - அன்றே விழிப்புற் றெழவில்லை மொழிப்பற் றுடையோர் ! துறைதொறும் துறைதொறும் இந்தி - இளித் துரைத்தனம் சீராய் நடத்திடு மென்றே அறிக்கை பிறப்பித்து விட்டார் - மைய ஆட்சித் தலைவரினி மீட்சியு முண்டோ ? நொந்த உளத்தினில் வேலை - மீட்டும் நுழைத்திடல் போலிந்தி நுழைத்திட வந்தார் இந்த உயிரென்ன பெரிதா ? - தமிழா இன்றே எழுச்சிகொள் இன்றமிழ் காப்பாய் ! இந்தி நூல்களை எரிப்போம் - நம் எண்ணக் கொதிப்பினைக் கண்ணுக் கெதிராய் அந்தத் திணிப்பர் அறியப் - போர் அணி கொண்டு நெஞ்சத் துணிவோடு நிற்போம் !