பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 71 தலைமை பெற்மூேரைப் பிடித்துச் - சிறையில் தள்ளிவிட் டாலும் நாம் துள்ளி யெழுவோம் குலையை நடுக்கும் கொடுமை - செயினும் கோழைக ளாகநாம் மாறிட மாட்டோம் ! கண்ணியம் கடமை தவருேம் - கொண்ட கட்டுப் பாட்டையும் விட்டிட மாட்டோம் எண்ணிய எண்ணம் முடிக்க - நன்மை இல்லாத வழிகளிற் செல்லவு மாட்டோம் ! மொழிப் பற்றுக் கொண்ட வீரர் - தம் முழக்கத்தின் முன்னந்தக் குழப்பத்தை விளைக்கும் செழிப்பற்ற இந்தி ஒழியும் ! - அன்றேல் செந்தமிழ் நாடே யொழிந்திட வேண்டும் ! முழக்குக ! முழக்குக! தமிழா!-இந்தி மொழிகொண்டு வந்தாரை விழிகொண்டே எரிப்பாப் ! முழக்குக ! முழக்குக ! தமிழா ! - இந்தி மொழிபோகும் இன்றேல்எம் உயிர்போகும் என்றே ! உயிரோட்டம் உள்ள வரைக்கும் - உடலில் ஒருசொட்டு இரத்தம் இருக்கின்ற வரைக்கும் திமிராட்டம் போடும் இந்தி - எங்கள் தென்னுட்டில் வாலாட்ட மாட்டாமல் செய்வோம்! முழக்குக ! முழக்குக ! தமிழா ! - இந்தி மொழிக்கிங்கே இடமில்லை 1 விழிப்புற்று விட்டோம் ! முழக்குக! முழக்குக 'தமிழா! - தமிழ் மொழிவாழ்க 1 இன்பத் தமிழ்வாழ்க நன்றே ,