பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாச்சியப்பன் சமத்துவம் பேசிக் கொண்டே - கெட்ட சாதி வெறி வளர்ப்பாய் தமிழ்த் தாய் மொழியிருக்க - ஆங்கிலம் தன்னைப் புகழ்ந்திடுவாய்! சொந்த மொழியிற் பாடம் - நீ சொல்லிக் கொடுப்பாயா? இந்தி மொழி வருதே! - அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள. அன்னிய நாட்டுமொழி - யான ஆங்கிலத்தைப் போற்றிடும் நீ இந்தியப் பொது மொழியாய் - எங்கள் இந்தியும் ஏற்றிடுவாய்! தொன்மைத் தமிழ் மொழியை - வளர்க்கத் துணிவு கெட்டவனே இன்னும் ஆங்கிலத்தையே - நீ ஏற்றிப் புகழுகின்ருய்! ஆங்கில மோகத்துடனே - அடே அடிமைத் தமிழ் மகனே பாங்குள இந்தியையும் - உடனே படித்துக் கொண்டிடுவாய். அண்டிப் பிழைக்க வந்தால் - இந்தி அறியாதவனை நாம் கண்டிப் பாய்த் தள்ளி வைப்போம் - இதைக் கட்டாயம் புரிந்து கொள்வாய்!