பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 81 தாயும் பேயும் தமிழெங்கள் தாயென்று போற்று ! - இன்பத் தமிழைச் சிதைக்க வந்திடும் இந்தி கெட்ட-பேயென்று துாற்று ! தமிழெங்கள் வாழ்வென்று மதிப்பாய் ! - இன்பத் தமிழைக் கெடுக்க வந்திடும் இந்தி வெறும்-துTளென்று மிதிப்பாய் ! தமிழெங்கள் அழகென்று கொள்ளு - இன்பத் தமிழை யழிக்க வந்திடும் இந்தி பொல்லாக்-கழுகென்று தள்ளு தமிழெங்கள் உயிரென்று பாடு - இன்பத் தமிழை யொழிக்க வந்திடும் இந்தி அற்பம் - இழிவென்று போடு ! Iதமிழெங்கள் தாயென்று போற்று தமிழுக்குப் புதுநூற்கள் சேர்ப்பாய் ! - இன்பத் தமிழுக்குப் பகைநூற்கள் ஏதேனும் கண்டால் நெருப்பிட்டுக் கொளுத்தியே தீர்ப்பாய் ! தமிழுக்குப் புகழ்சேர உழைப்பாய் ! - இன்பத் தமிழுக்குப் பழிசேர்க்க முனைவாரைக் கண்டால் கைக்கூலிப் பிறப்பென்றே பழிப்பாய் ! தமிழுக்கு நலஞ்சேர்க்கத் துடிப்பாய் 1- இன்பத் தமிழுக்குப் பிழைசெய்து வாழ்வாரைக் கண்டால் தகாதென் றேதுரத்தி அடிப்பாய் ! தமிழுக்குத் தொண்டென்றும் செய்வாய் ! - இன்பத் தமிழுக்குக் கேட்டினை விகளத்திடும் பகைமேல் அனல்கக்கும் குண்டென்று பாய்வாய் ! 6 (தமிழுக்குப் புதுநூற்கள் சேர்ப்பாய் நா.