பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாச்சியப்பன் வெல்லத் தமிழ் காக்க வேங்கையெனப் போராடு போரென்ற முழக்கம் புறப்பட்ட தேனடி தோழி? நேருவின் வாக்கு நிலைமாறிப் போனதால் தோழா! தவறும் படிநேரு தந்தவாக் கென்னவோ தோழி? எவர்மீதும் விருப்பின்றி இந்திதிணி யோமென்றே தோழா? இந்தியைக் கட்டாயம் இன்றேன் திணித்தாரோ தோழி? அந்தக் குடித்தலைவர் இராசேந்திரர் ஆணதான் தோழா ! கட்டளை யிட்டவர் கருத்துத்தான் என்னேடி தோழி? சட்டத்தால் எண்ணத்தைச் சாதிக்க லாமென்றே தோழா! எண்னத்தில் என்னதான் எண்ணி யிருக்கின்ருர் தோழி? உண்மையில் இந்திக் குயர்வு தருமெண்ணம் தோழா! இந்தி உயர்வால்ை ஏற்படும் தீதென்ன தோழி? செந்தமிழ் நலிந்து சிதைந்திடும் காணென்றன் தோழா? ஒன்று வளர்ந்தால் ஒன்று தளருமோ தோழி? கன்ருென்று மேய்ந்தால் களத்துப் பயிரென்னும் தோழா? ஆங்கிலத் தால்தமிழ் அழிந்து போனதோ தோழி: தீங்குகள் ஆயிரம் செவிமடுப் பாயென்றன் தோழா ! அறிவுக் கலையெல்லாம் ஆங்கிலத் துண்டேடி தோழி? குறைந்தது தமிழென்ருல் ஆங்கிலங் கொண்டதால் தோழா ! விஞ்ஞான நூலுக்கு வேண்டுமே ஆங்கிலம் தோழி! எஞ்ஞான மாலுைம் எளிதாகும் தமிழாலே தோழா ! கலைச்சொற்கள் தமிழிலே காண முடியுமோ தோழி: தலைப் பட்டால் எத்தையும் தமிழிலே யாக்கலாம் தோழா !