பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 109 வான வில்லின் அழகுதனை வகுத்துப் பார்த்த அன்னவனும் தேனின் இனிய மொழியாட்குத் தேடித் தந்தான் மேகலையே! இரவில் தோன்றும் விண்மீன்கள் இயற்கை யழகில் ஈடுபட்டு விரைவில் வயிரம் கொண்டுவந்து வியப்புற மங்கைக் கழகுதந்தான்! மனிதன் தோன்றிய நாள்முதலாய் மன்னும் இயற்கை வழிச்சென்ருன். தினமும் நமக்கு வழிகாட்டித் திகழும் இயற்கை வாழியவே!