பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 135 தணியாக் காதல் நேற்றுப் பிறந்ததன்றே-காதல் நெடுநாள் இருப்ப தன்ருே வேற்று மனிதர்களால்-அன்பு வெட்டப் படுமோடி? வெட்ட வருவாரேல்-அது வீணுய்ப் போகுமடி கட்டை யரிவாளால்-இருப்புக் கட்டி பிளப்பாரோ? குட்டை மனிதரிவர்-காதல் குணமறி யாதவர்கள் தட்டத் தணிவ தில்லை-காதல் தழைக்கும் உரிமையடி? பவழ இதழ் நடுவில்-உள்ளே பதித்த வயிரப்பல் தவழ விடுமொளியில்-கொண்டேன் தணியாக் காதலடி!