பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பாடல்கள் புதிய வாழ்வு அவன் : நாட்டின் அரசாட்சி புதிதாகையிலே-மிக நல்லர சாட்சிதான் ஒங்கையிலே வீட்டில் மனங்கொண்டோம் காதலினல்-இனி வெற்றியே வாழ்வில் உண்டாகுமடி! அவள் : நாட்டில் உரிமை பிறந்ததளுல்-இனி நங்கையர் காதல் உரிமை பெற்ருர் கூட்டுக் கிளிநிலை போனதன்பே-இனிக் கூடுவோ மின்ப வாழ்வினிலே! அவன் : வெற்றித் தமிழரின் கீர்த்தியெலாம்-எங்கும் விளங்கித் திகழும் சீர்த்தியைப்போல் பற்றுக் குறையாக் காதலினைச்-சுவை பார்ப்போம் வாராய் பெண்மயிலே! அவள் : காதல் எனுமின்ப லோகத்திலே-நம்மைக் கட்டும் கவலைகள் ஏதுமில்லை மோதும்நல் லின்பக் கடலுக்குள்ளே-நன்ருய் மூழ்கித் திளைப்போம் ஒன்ருகி!