பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#43 நாச்சியப்பன் வெட்கமாயிருக்குதடி! சொல்ல வெட்கமா யிருக்குதடி இருந்தாலும் சொல்லி விடவேமனம் துடிக்குதடி-தோழி சொல்ல வெட்கமா யிருக்குதடி! வீட்டுக் கொல்லைத் தோட்டத்திலே ஊஞ்சல் ஆட்டத்திலே நாளும் தம்மை வேட்டைக் காரன் போலே வந்து வேர்க்கவேர்க்கப் பார்ப்பானே அவன் ஐயையோ சொல்ல வெட்கமா யிருக்குதடி. தன்னந் தனியாய் நானிருக்க வேலி தாண்டி யுள்ளே நுழைந்தாண்டி என்ன மாயமோ நானறியேன்-அவன் இருகைக் குள்ளே விழுந்தேனடி ஐயையோ சொல்லவெட்கமா யிருக்குதடி.