பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியப்பன் நீயே என் காதலி செத்தாலும் பிழைத்தாலும் நீயே என் காதலி சிவலோகம் சேர்ந்தாலும் நீயே என் காதலி எத்தாலும் உன்னைநான் எய்தியே தீருவேன் இடையூறு பலவேனும் உன்னைநான் சேருவேன். அத்தான் என் றென்னை நீ அழைத்தாலே போதுமே அதுவேநல் லின்பத்தை அளிக்கின்ற கீதமே முத்தான வாயால்என் முன்னின்று பாடுவாய் முன்ருனைக் காற்ருடும் சுதிவந்து கூடுமே! வேண்டாத வெறுப்போடு நூருண்டு வாழினும் வீனன வாழ்வாகப் பாழாகிப் போகுமே! தூண்டாத விளக்கேனும் எரிகின்ற மட்டிலும் சுகமான ஒளிவீசித் திகழும்நன் ருகுமே! கண்ணுன கண்ணே உன் கண்ணிரைக் கண்டு கலங்காத நெஞ்சுந்தான் கலங்குதல் உண்டு எண்ணுத எண்ணங்கள் எண்ணிநீ நெஞ்சில் ஏங்குதல் கண்டுநான் உருகினேன் வஞ்சி! செத்தாலும் பிழைத்தாலும் நீயே.என் காதலி சிவலோஞ் சேர்ந்தாலும் நீயே.என் காதலி எத்தாலும் உன்னை நான் எய்தியே தீருவேன் இடையூறு பலவேனும் உன்னை நான் சேருவேன்!