பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நாச்சியப்பன் முத்தம் முத்தத்தில் முடிந்ததடா உலகம்! முற்றுபகையாற் போரிற் செல்லும் சித்தக்கல் மன்னர்களும் பாவை சிறுமுத்தம் வைக்கப் போர்மறப்பர்! முத்தத்திற் கொருகன்னி மறுப்பின் முதிர்ந்தே போர் எழுவதுவும் உண்டு சித்தத்தை யிழந்திடுவார் மன்னர் சிறுமுத்தம் பெரும்போரை யாக்கும்! முத்தத்தை நஞ்சென்பான் உலகில் முடித்துவிட்டான் வாழ்வுதனை யன்னன் சித்தமினி மேல்மகிழ ஒன்றும் சிறிதுமில்லை இவ்வுலகில் திண்ணம்! முத்தம்பெற மறுக்கின்ற ஒருவன் முதிர்ந்தஒரு தடியனெனச் சொல்வேன் எத்தைத்தான் விழைகின்ருன் பாரில் ஏன் தின்னப் பிறந்தானே சொல்லே!