பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் lêl பதினைந்து சுவைவழங்கத் திட்ட மிட்டுப் பாட்டரங்கம் என்றிங்கே கூட்டி இவ் ஒன் பதுகூவையும் அறுசுவையும் சேர்த்து வைத்துப் பரிமாறிப் பேத்திமணம் சிறக்கச் செய்தார். காடப்ப செட்டியார் சிகப்பி ஆச்சி கனிந்தமுதற் பிள்ளை அருளுசலந்தான் ஏடொப்ப எழுதுகின்ற எழுத்து முத்தாம் இவன்குணமோ மாணிக்கம் தங்கக் கட்டி ஆடகப்பொன் சோலைச்சி துணையாய்க் கொண்டான் அழகுமகள் முத்துப்பூங் குழலிப் பெண்ணே ஈடற்ற தவத்தாலே பெற்ருன்: இன்பம் இழையமணம் நடத்துகின்ருன் வாழி வாழி! திறமைமிகு பெரிச்சியப்பன் காந்தி பெற்ற செல்வமகன் சுப்பையா துணைவ கைப் பெறுமினிய முத்துப்பூங் குழலி வாழ்க பேறுபதி றுைமுழு தாகப் பெற்றுக் குறள்நெறியில் இல்லறத்தை நடத்தி அன்பு கூடுகின்ற நல்வாழ்வு பெற்று வாழ்க! அறந்தழுவு மக்கள்தமைப் பெற்று வாழ்க ஐயாமார் கொஞ்சவரும் பேரர் வாழ்க! எண்ணுத எண்ணமெலாம் எண்ணி யெண்ணி எத்தனையோ கற்பனைகள் கட்டிக் கட்டி வண்ணமுறு வாழ்க்கைதன அமைத்துக் கொள்ள வைத்திருப்பாள் திட்டங்கள் கோடி கோடி கண்ணுன கண்ணனிவன் சுப்பை யாவைக் கலியாணம் கொண்டதஞல் வாழ்க்கை முற்றும் வண்ணங்கள் நிறைந்திங்கே சுவைபெ ருக்கும் வாழியரோ முத்துப்பூங் குழலி வாழ்க!