பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நாச்சியப்பன் பாரதிதாசன் பாண்டிய நாட்டி லந்நாட் பைந்தமிழ்ப் புலவ ரெல்லாம் மாண்டனர் என்ருல் சங்க மாண்புநம் முன்னே தோன்றும் மீண்டவர் வந்தா ரென்று விளம்பிடப் பாட லேக்கை யாண்டவன் புகழைப் பெற்ருேன் பாரதி தாச னன்ருே? மிகுத்திடு மூடத் தன்மை மேவிடும் சாதித் தீமை நகத்தகுஞ் சமயக் கொள்கை நாட்டினின் ருேட்டத் தானே தொகுத்ததன் நூலி லெல்லாம் தூண்டினன் விளக்க மென்னும் பகுத்தறி வியக்கந் தன்னைப் பாரதி தாச னன்ருே? நாட்டினில் மூடக் கொள்கை நாட்டித்தம் வாழ்வை யின்பத் தோட்டமாய் அமைத்துக் கொள்ளத் தோன்றிய கயவ ரெல்லாம் ஏட்டினை மூட்டை கட்டி எடுத்தனர் ஒட்ட மென்னப் பாட்டினை முழக்கு கின்ருேன் பாரதி தாச னன்ருே?