பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iாடல்கன் &bಳಿ பாவேந்தரின் இளைஞர் இலக்கியம் அன்புத் தலைவரே ஆற்றற் கவிஞர்களே இன்பச் சுவைநாடி இங்குவந்த மூத்தோரே அச்சுத் தொழிலாளி யான்பாடும் பாட்டிதனை மெச்சிப் புகழ்விரோ, வேருய் நினைப்பீரோ என்னென் றறியேன் இருந்தாலும் பாவேந்தர் தன்னை நினைக்குங்கால் தன்னை யறியாமல் உள்ளம் குதுகலிக்க ஊற்றுப்போல் பாய்ந்துவரும் வெள்ளக் கவிப்புனலை வீறு கவியாக்கி உங்கள்முன் வைத்தேன் உவந்து திறப்பீரே தங்கள் மனக்கதவைத் தான். வண்ண எழிலும் வழவழப்பும் கொண்டதுவாய் கண்ணுக் கழகாய்க் கலைப்படைப்பாய் ஓர் அழைப்பை கோத்துப் படியெடுத்துக் கூர்மையுடன் வாசித்துப் பார்த்துத் திருத்திப் பதிப்பித்த பின்னலே ւատոն குழந்தை பளபளக்கும் தேன்முகத்தில் மச்சமிட்டு வைத்து மருவாக்கும் தன்மையென அச்சுப் பிழைதோன்றி நம்மை அசடாக்கிக் கொச்சைச் சிரிப்பால் குறும்பு முகங்காட்டும்! அவனென்ற சொல்லோ அவளாய் இனமாறும் சிவமயமோ மாறிச் சில மயமாய்க் காட்சிதரும். காலைமணி பத்து கருத்துான்றிப் பார்த்ததுதான் கோலக் கலைமணிபத் தாய்க்குறுகிக் காட்சிதரும். மூன்று முறைவாங்கி முப்பத்து மூன்றுமுறை தானே படித்துத் தலைப்பில் அடிப்பாணக் நா-14