பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 215 மத வெறிக்குப் பலியார்ை உலகமெலாம் துன்பமுற்ற தெதற்கடி தோழி?-மிக உத்தமர் காந்தியார் செத்தனர். ஆகையால் தோழா!-உயிர் விலகிடவே செய்துவிட்ட நோயென்ன தோழி?-மத வெறியென்னும் நோய்வந்து குறிவைத்துச் சுட்டதடா தோழா!-நல்ல காந்தியுயிர் போக்கவந்தோன் யாரடி தோழி?-தினம் கல்வணங்கும் இந்துமதக் கல்நெஞ்சக் காரனடா தோழா! -அவன் சாந்திசொல்லும் காந்திக்கெதிர் ஆனதேன் தோழி?-அந்தச் சண்டாளன் மதவெறி கொண்டவன் ஆகையால் தோழா! -அந்த உத்தமர் மதத்தைஎதிர்த் தாரோடி தோழி?-அவர் உண்மையில் இந்துமதம் கண்ணென்று சொன்னரே தோழா!-பின் செத்துவிழச் சுட்டதன் மூலமென்ன தோழி?-தீமை செய்யாதீர் நபிவழி உய்வோருக் கென்றதால் தோழா ! -அதை ஒப்பாமல் சுட்டானே யாரடி தோழி?-அவர் உயிர்கொண்டோன் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தான் தோழா !-அவர் சிப்பாய்கள் போலுடை பூண்டதேன் தோழி?-சண்டை செய்திட நாட்டிடை எண்ணியே பழகினர் தோழா! - -அந்தச்