பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 217 வாழ்த்திடக் கூடுவீர்! எழுப தாண்டுகள் எய்திய கிழவரின் பிறந்தநாள் தமிழினம் பெருமை யுடையும்நாள் வந்தது தோழர்காள்! வாழ்த்திடக் கூடுவீர்! ஆரிய மாயையில் ஆழ்ந்து நாமெலாம் சீரிய மானம் சிறப்பிழந் தடிமையாய் ஏங்கும் நாள் அறிவின் ஏற்றம் காட்டினேன் தன்மானக் கொள்கையைத் தமிழர்க் களித்தோன் பிறந்தநாள் தமிழ்ப்புகழ் பேசும் திருநாள் வந்தது தோழர்காள்! வாழ்த்துகள் பாடுவீர்! செந்தமிழ் நாட்டில் வந்திரு முறைகள் புகுந்த இந்திதான் புறங்காணச் செந்தமிழர் பேர்நாட்ட நல்லறப் போர்தொடுத்த ஏந்தல் ஈரோட்டுப் பெரியார் எழுபதாம் ஆண்டு நினைவுநாள்; செய்நன்றி நினைக்கும் பெருநாள் வந்தது தோழர்காள்! வாழ்த்தொலி முழக்குவீர்!