பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 229. அருந்தமிழ்ச் செல்வன் அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! நெஞ்சில் கருணை யுள்ளான்-தமிழ் நிதியம் அவன் தா னடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! அண்ணன் வழியில் வந்தான்-தமிழ் அன்பில் சிறந்தானடி எண்ணும் புதுமை யெல்லாம்-மிக எளிதில் வடிப்பா னடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! இலக்கிய ஆர்வ முள்ளான் - கவி இன்பங் கொடுப்பானடி மலர்க்குவை சூட்டி இந்த-முழு மாநிலம் போற்று தடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! உலகக் கவிஞ னென்றே-புகழ் ஒன்றிச் சிறந்தாண்டி பலகற் ருேர்க ளெல்லாம்-அவன் பாவைப் புகழ்ந் தா ரடி! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி! நாடகம் ஆக்கி நிற்பான்-அதில் நடித்துப் பெருமை கொள்வான் ஆடகப் பொன்னி கர்த்தான்-கலை ஆர்வம் அளப்ப துண்டோ! அஞ்சுகச் செல்வ னென்பார்-கிளியே அருந்தமிழ்ச் செல்வ னடி!