பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 231 சம்பத்துக்கு வாழ்த்து அந்தநாள் மறைம லைபோல் அழகிய தமிழைக் காக்க இந்தநாள் எழுச்சி பெற்றே எழுந்த நம் வீரர்க் கெல்லாம் வந்துளாய் தலைவ ளுக வாழ்த்தினேன் சொல்லின் செல்வா! இந்தியை முறிய டித்தே இன்றமிழ் காப்பாய் வாழி! இரத்தமே சிந்தி லுைம் இன்னுயிர் போய்விட் டாலும் அருத்தமே இல்லா இந்தி ஆட்சியால் விளையும் தொல்லை: வருத்தமே மீண்டும் வாரா வகையிலே ஒட்டி, வெற்றி நிறுத்தவே முனைவாய் வாழி! நெடுங்குன்றத் தோளாய் வாழி! மொழிப்போரில் வெற்றி பெற்று முடிவிலே நாட்டுப் போரும் விழிப்போடு நடத்து தற்கு வேண்டிய தகுதி பெற்ருய்! செழிப்பான தமிழர் நாட்டுச் செல்வமே சம்பத் தென்னும் எழிற்பேராய் வாழி! வாழி! இளஞ்சிங்க மயைாய் வாழி!