பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தாச்சியப்பன் திருத்த வேண்டும் உலகந் தன்னில் செல்வ ரென்றும் ஏழை யென்றும் உலவும் தீய கொள்கைதன்னை ஒழிக்க வேண்டும். கலக லென்ன மக்களெல்லாம் ஒன்ருய்க் கூடிக் களிப்புடனே வாழும்வகை செய்ய வேண்டும். நிறத்தில் காணும் வேறுபாடு நீக்க வேண்டும் நிலத்தில் மக்க ளாய்ப்பிறந்த யாவ ருக்கும் புறத்தி லென்ன வேறுபாடு தோன்றி லுைம் போற்ற வேண்டும் நம்மை யொத்த பிறவி என்றே! சாதி யென்றும் சமய மென்றும் மக்களுள்ளே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் முண்டர்தம்மை நீதிக்கூண்டில் ஏற்றிவைத்து தண்டித்தேநல் நெறிநடக்க அறிவுறுத்தித் திருத்தவேண்டும்! சூழ்ச்சியாலே மக்கள் சொத்தைக் கொள்ளே கொள்ளும் சுயநலத்துக் கொள்கைதன்னைச் சுட்டெரிப்போம்! வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் ஏழை மக்களுக்கே வேண்டுங் கல்வி கற்றுவைக்க விரைவோம் வாரீர்!