பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 249 திருக்குறள் பரப்பிடுவீர்! திக்கெட்டும் திருக்குறள் பரப்பிடுவீர்!-இந்தச் செந்தமிழ் நாடெங்கும் பேருல கெங்கனும் திக்கெட்டும் திருக்குறள் பரப்பிடுவீர்! மக்களின் வாழ்வு மலர்ந்திடச் சிலசில சொற்களில் வள்ளுவன் சொல்லிய பெரும்பொருள்! (திக்கெட்டும் உலக வாழ்வின் உயர்வின உரைத்திடும் ஒச்சும் அரசியல் முறையைக் கூறிடும் இலகு மாந்தர்தம் காதல் நெறியினை எடுத்துரைத் தின்பம் சேர்த்திடும் ஒரு நூல்: (திக்கெட்டும் பாழும் புராணங்கள் நச்சுநீர் பாய்ச்சிப் பகுத்தறி விழக்கச் செய்தமை நீக்கி வாழும் முறையினை வாய்மை நெறிதனில் வகுத்துதல் வழியினைக் காட்டிடும் பெருநூல்! (திக்கெட்டும் தமிழர்க் கொருநெறி வகுத்தவன் வள்ளுவன் தந்த உயர்நூல் தானிந்த உலகில் நமக்கினி இலக்கியம், வாழ்வின் குறிக்கோள் நன்ருய் வாழவே ஒன்ருய் உலகமே! . (திக்கெட்டும்