பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 251 பாழ்படலாமோ? அம்மையும் அப்பனும் அன்பாய்க் கூடி நம்மைப் பெற்ற நாள்முதல் இன்றும் மண்ணில் நம்போல் மனித இனத்தவர் எண்ணில் லாதவர் இறத்தல் கண்டோம்! இப்புவிப் பிறந்த எல்லா மக்களும் எப்பொழு தாயினும் இறப்ப துறுதி எனத்தெளி வுற்ருேம் தினப்படி ஆவி தனையிழப் போர்க்குத் தத்தம் உறவினர் வழக்கத் தின்படி வந்து கூடி இழவு கொண் டாடி ஏகு கின்ருர்! நாட்டிற் குழைத்த நல்லோ ராயின் ஏட்டிற் புகழ்ந்தவர் ஏற்றம் எழுதியும் ஆண்டிற் கொருநாள் அவர்நினை வேற்று வேண்டும் அவர்போல் வீர இளரு ரென (று) ஆர்த்துப் பேசியும் அவர்பெயர்ப் புகழ்ந்தும் பேரியல் விழாவாய்ப் பெருமைசெய் கின்ருேம்! வாழ்நாள் முழுதும் வருத்தங் கொண்டு பாழென் றுலகைப் பழிக்கின் ருேமா இறந்தவர் நிகனவே என்றுங் கொண்டு சிறந்தநம் வாழ்வைச் சிதைக்கின் ருேமா?