பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 ه عها به தவளையின் சொர்க்கம் தென்றல் சிலிர்சிலிர்க்கத் தேன்.மாரி பெய்திருக்கக் கன்னல்நேர் மங்கை கருப்புத் தவளையாள் மன்னன் தவளை மடியிருக்கும் வேளையிலே, சொன்ன நாள் வந்ததையா! சொர்க்கம்போம் வேளையிது' என்றிவை சொன்னன் எதிர்வந் தமைச்சன்! 'புரோகிதன் வந்தேன். நீர் போவதற்குத் தக்க சிரோன்மணிகள் பாதை திறந்துள்ள திப்போதே, செல்லும் சடங்கெல்லாம் செய்யவோ?’ என்றந்தப் புல்லன், புரோகிதன் பொய்நாக்குப் பாம்பண்ணன், சொல்லியதும் வெற்றிலை சூடமொடு பாக்கெல்லாம், கொண்டுவந்து பாம்பண்ணன் வாய்முன் படைத்துச் 'சடங்கெல்லாம் செய்து சடுதியில் நான் போகத் திடமான மந்திரங்கள் செப்புகவே' என்றன்னன் தாள்வணங்கிச் சொன்னன் தவளை பரசன். "நீர் மால்மருகா! மால்மருகா! வாமுருகா! என்றெல்லாம் சொல்லியென்றன் பின்னே சுறுசுறுப்பாய் ஒடிவந்து கல்லென்றும் மேடென்றுங் காடென்றும் பாராமல் வந்தால் விரைவில் வரவேற்கும் சொக்கமுமை' என்றந்தப் பாம்பார் இசைக்கச் சரியென்று மன்னன் தவளை யரசி தவளையிடம், 'இன்ப புரிக்குநான் ஏகுகின்றேன் மங்காய்நீ இன்னும் சிலநாளில் இன்பபுரி வந்திடுக; பாம்புப் புரோகிதர்தம் பாதம் பணிந்திடுக! தேம்பா திருந்திடுக!' என்றவளைத் தேற்றித்