பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தாச்சியப்பம் அடையாளச் சீட்டின்றி தடமாட முடியாதாம் அயல்நாட்டுத் தெருக்களிலே! அநியாயம்! இதுமெய்யே! தடையின்றி வாழ்வதற்குத் தலைவரியும் கொடுத்தால்தான் தங்கியிருந் திடலாமாம்! தவறிவிட்டால் விரட்டுவராம்! பெற்ற தாய்..... கொண்டமனே யாட்டியுடன் கூடியிருந்து வாழ்வதற்குக் கூடுதலாய் வரிக்கொடுக்க வேண்டுமெனக் கூறுகின்ருர், வண்ண முறு மக்களையோ வரவழைத்துக் கொள்வதற்கு வழியில்லை எனச்சட்டம் வகுத்துவிட்டார் அங்கெலாம்! பெற்ற தாய்...... செத்தாலும் தாய்நாட்டில் சாவதிலே சிறப்புண்டு சென்றுபிற நாட்டினிலே சீரழிய வேண்டாமே! எத்தனைதான் வறுமையிலே இடருற்ற போதினிலும் இனிமேலே பிறநாட்டை எண்ணுதே! எண்ணுதே! பெற்ற தாய்......