பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 265 பத்திரிகைக் காரர் பேணுவிலே பாய்ந்தோடும் மையில் கலந்திருப்பேன் சித்திரப் பெண்கள் நினைத்தவுடன் சிந்திடும் கண்ணிரில் சேர்ந்திருப்பேன்! நீதி நெறியைத் தலைகாக்க நின்றிடு மன்றிலுஞ் சென்றிருந்தே பாதி கலந்துநான் உண்மையெனும் பாவையை வஞ்சப் பழிதீர்ப்பேன்! பஞ்சமா பாதகம் செய்பவர்க்குப் பக்கத் துணையாக நானிருப்பேன் நெஞ்சார என்னை நினைப்பவர்க்கு நித்தமு மோடிப் பணி புரிவேன் எத்தனை எத்தன யோ இடத்தில் என்கொடி கட்டிப் பறக்குதையா! சத்திய ஞானம் படைத்தவரும் தஞ்ச மடைவதுண் டென்னிடமே! பொய்மக ளென்னை யொருமுறையே புணர்ந்தவர் மீண்டும் மருக்கொண்டே எய்தித் தொடர்ந்து கலந்திடுவார் எத்தனை நாளைக்கும் சலிப்படையார்!