பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நாச்சியப்பன் கணந்தோறும் இந்நாட்டு மக்கள் வாழ்வில் கறையின்றி நிறைபெருக வேண்டு மென்னும் உணர்வுடனே வெளியிடுக நூலை! நாட்டை உயர்த்துகின்ற செயலாகும்! முயற்சி வெல்லும்! தலைப்பினிலே ஒருகவர்ச்சி! எழுது கின்ற தமிழ்நடையில் ஒரு கவர்ச்சி! படிக்கும் நெஞ்சை வலைப்படுத்தும் அச்சமைப்பில் ஒருகவர்ச்சி! வரைபடத்தில் ஒருகவர்ச்சி! வண்ணங் காட்டி மலைப்படையைச் செய்கின்ற ஒவி யங்கள் வாய்ந்திருக்கும் புதுமைகளின் கோவை என்னக் கலைப்படைப்பாய் வெளியிடுக நூலைக் காணும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தா கும்மே! வரங்கொடுக்கும் பரம்பொருளின் தத்து வத்தை வழங்குகின்ற மெய்யுணர்வு விளக்க மேனும் சரங்கோத்த மலர்போன்ற துTய காதல் தன்மையினை வெளிப்படுத்தும் கவிதை யேனும் கரங்குவித்துத் தாள்பிடித்து வாழ்ந்த மக்கள் கண்டவிடு தலைப்போரின் காதை யேனும் அரங்கேற்றி வெளியிடுக நூலே! மக்கள் ஆர்வமுடன் வாங்குதற்குத் துண்யா கும்மே!