பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கல் 285 ஒரத்தில் ஒதுங்கட்டும்! புனிதப் பாட்டின் உரைவிளக்கம் செய்யட்டும்! நாட்டைக் காக்கும் தீரத்தை யுடையவரே திரளட் டும்.நம் திருநாட்டைக் காப்பதற்குச் சேரட் டும்மே. 'தங்கத்தைப் பதுக்குபவர் நாட்டைக் காட்டித் தருகின்ற பகைவரடி! சீனத் தான்போல் இங்கிவரும் சேர்ந்தொழிய வேண்டி யோரே! இளம்பெண்கள் மணிக்கழுத்தில் தொங்கு கின்ற தங்கத்தால் அழகேனும் சேர்வ துண்டு! தனிப்பட்டோர் பெட்டகத்தில் தூங்கும் கட்டித் தங்கத்தால் என்ன வந்து சேரும் பெண்னே? தாய்நாட்டின் தேவைக்குப் பயனில் லாமல்' 'பெருகிவரும் உணர்ச்சியுடன் நீங்கள் சொன்ன பேச்சினிலே உண்மைமிக உள்ள தத்தான் கருமிகளின் பெட்டகத்தில் தூங்கு கின்ற கணக்கற்ற தங்கத்தை நாட்டுக் காக்க அருமைமிகு சட்டத்தைக் கொண்டு வந்த அமைச்சாைநான் பாராட்டு கின்றேன்; நல்ல உருவழகு தருமெனினும் நாட்டைக் காக்க உதவுவது பெரிதத்தான்; நகை கொடுப்போம்!" 'அத்தனையும் கேட்டறிந்து கொண்டு விட்டாய், அதற்குரிய பரிசுதர மறந்து விட்டாய்! மொத்தம்நீ கேட்டவின அத்த கனக்கும் முழுவிளக்கம் சேர்த்துவிடை தந்தே னன்ருே !' 'புத்தறிவு மணங்கமழச் செய்த வர்க்குப் பொல்லாத ஏமாற்றம் பரிசா காதே! அத்தனைக்கும் எண்ணியெண்ணித் தருவேன் அத்தான் அருகில்இதோ வந்துவிட்டேன் உங்கள் அன்பேl'