பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியப்பன் மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! இன்னமு தாகிய என்னனே யேஉனை என்னித யாசன மேற்றினேன்-கன்னலின் செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட வந்தருள் செய்கவே வாழ்த்து. வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும் உன்னருளே தாராய் உவந்து. தமிழ்படித்த தாலிவர்கள் தாழ்ந்தோர் எனவே நமைப்பழித்தார் எல்லாமிந் நாட்டில்-அமைதியொடு வாழ விடுங்கொடுமை நாட்டில் மறைந்தொழிய ஆளவரு வாய்நீயம் மா! பாழும் பகைசூழ்ந்து பைந்தமிழின் வேரறுத்து வாழும் நிலைகண்டேன் வையத்தே-தாழும் தமிழர் கிளர்ந்தெழவே தாயே நின் சக்தி அமிழ்தை வழங்கி யருள். நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்ருல் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்ருர்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று. *