பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் சுவையமுதே ! தித்திக்கும் சொல்லோவியமே ! ஆதிமுதல் தாயே! அருந்தமிழே ! நல்வாழ்த்து ! சாதிவரு முன்னே தமிழ்நாட்டில் மக்கள் பிறந்து சமத்துவமாய்ப் பேருலகில் வாழச் சிறப்புடனே பெற்றெடுத்த செந்தமிழே நல்வாழ்த்து ! கண்ணகியைப் பெற்றெடுத்துக் கற்பின் திறங்காட்டி மண்ணுலகைச் சீர்படுத்தும் மாணிக்கச் செந்தமிழே! அவ்வைமூ தாட்டி அறம்பாடக் கூழுட்டிச் செவ்வை புறவளர்த்த செந்தமிழே நல்வாழ்த்து ! போரில் புறங்கொடுத்த புல்லன் மகனென்ருல் மார்பறுக்கத் தான்துணியும் மங்கையினைப் பெற்றவளே ! தாய்நாடு வாழத் தனதருமைச் சுற்றமெலாம் போய் வீரப் போர்புரியப் போக்குந் திருமகளை ஊட்டி வளர்த்தவளே ! ஓங்கு பெருமையினை நாட்டிச் சிறப்படைந்த நற்றமிழே வாழ்த்து ! திருமறைசொல் வள்ளுவர்க்கும் தேர்ந்தகபி வர்க்கும் பெருமையுறுந் தாயான பெண்ணணங்கே வாழ்த்து !