பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாச்சியப்பன் யாருக்கும் பணியாத வீரம் அன்னையடா தமிழ் அன்னை-உலகில் யாருக்கும் பணியாத வீரத்தைச் சேர்த்தவள் அன்னையடா தமிழ் அன்னை. பண்டு திருக்குறளைப் படைத்து வைத்திந்தப் பாருக்குன்னைத் தெரியப் படுத்தி வைத்தவள் அன்னையடா தமிழ் அன்னை. அகம்புறம் என்றிரு நூல்வழி வகுத்தாள் ஐந்நில இலக்கணம் தானவள் தொகுத்தாள் புகும் வெளி நாட்டினர்க் கெல்லாம் அறிவைப் புகட்டி நாகரிகம் பரப்பின ளுன்றன் அன்னையடா தமிழ் அன்னை. தோள்தின வெடுத்திடின் போர்க்களம் காட்டித் தொண்டுக்கு மகிழ்ந்திசைப் பரணியும் பாடி ஆள்பவன் நீயென அரியணை காட்டி அன்னியர்க்குன் வீரம் விளக்கமாய்க் காட்டும் அன்னையடா தமிழ் அன்னை. சூழ்ச்சியால் உன்னை வென்றனர் தீயவர் சூழ்ந்தன பேதங்கள் வீழ்ந்ததுன் வீரமும் ஆழ்ந்தெண்ணிப் பார்க்கும் அறிவைநீ இழந்தன அகமிக நொந்தவள் அலறியே நைந்தவள் அன்னையடா தமிழ் அன்னை,