பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 25 தமிழ்காக்கத் தனித் தமிழின் பெருமை காக்கத் தமிழ்நாட்டார் தம்மதிப்புக் காக்க வென்றே இமைதுடிக்க மறந்தாலும் நினைவு மாரு திருந்துபல செயல்செய்தார் மறைமலையார் தமை மறவா திருந்தார்க்கு வாழ்வு நாளில் நன்றிசெய்ய மறந்துவிட்டோம் இறந்த பின்னும் அமையுமொரு செயல்செய்யா திருந்து விட்டால் அழகல்ல தமிழ்மகனே மறந்திடாதே. நல்லபழம் அருகிருக்கப் பச்சைக் காயை நன்றென்று கடித்துண்ணும் செயலைப் போலே முல்லைப்பூ மலர்ந்திருக்கப் புல்ப றித்து முடிக்குழலில் செருகிக்கொள்வதனைப் போலே வெல்லமெனும் தமிழ்ச்செற்கள் தம்மை விட்டு வீனகப் பிறமொழிச்சொல் ஆளும் போக்கை வல்லமையாய்க் கடிந்துதமிழ் நலத்தைக் காத்த மறைமலையைத் தமிழ்மலையை மறந்தி டாதே !