பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 27 தமையெல்லாம் மகிழ்ச்சியிலே ஆழ்த்துகின்ற நல்லதொரு செய்தியுண்டு கூறுகின்றேன். தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழே என்று தக்கதொரு சட்டத்தை ஆக்கிவிட்டார். இமைப்போதும் தாழ்க்காதீர் தொண்டுசெய்வீர்! எத்திசையும் உலகரங்கில் முதலிடத்தை நமைப்பெற்ற தமிழ்த்தாய்க்கே நல்கும் வண்ணம் நாட்டிடுமோர் உணர்ச்சியுடன் உழைக்க வாரீர்! வாழிய வாழிய சூழிய சூழிய நாடிய கூடிட ஓங்குக ஓங்குக வாழிய வாழிய நாட்டு வாழ்த்து தமிழ் மொழி வாழிய தமிழ்க்குடி தமிழ்த் திரு நாடே ! நல்லறம் சூழிய நன்மைகள் இன்ப மெல் லாமே ! பொருள்பல தேடிய போதினில் மகிழ்ச்சி' நிலைத்தே ! உலகினில் யாங்கனும் தமிழர்கள் பெரும்புக ழோடே ! தமிழ்மொழி வாழிய தமிழ்க்குடி தமிழ்த்திரு நாடே !