பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாச்சியப்பன் முத்துத் தமிழ் நாடு இன்ப வளங்கள் கொழித்து விளங்கிய திந்தத் தமிழ் நாடே! - ஏற்ற மடைந்தும் ஆற்றல் நிறைந்தும் இருந்த தமிழ் நாடே! அன்பு வளர்க்கும் அறிவு நெறியில் அடர்ந்த தமிழ்நாடே! அன்றும் இன்றும் என்றும் தமிழே ஆளுந் தமிழ் நாடே! சிங்கத் தமிழர் சீலங் காக்கத் திரளும் தமிழ் நாடே! சேயும் இனத்து மானங் காக்கச் சீறும் தமிழ் நாடே! சங்கத் தமிழை வளர்த்த தாலே தழையும் தமிழ் நாயே..! தானே மன்னர் புலவர்க் கடங்கும் சந்தத் தமிழ் நாடே! தாழம் பூவும் மகிழம் பூவும் மணக்கும் தமிழ் நாடே சந்தனக் காட்டுத் தென்றல் வந்து தவழும் தமிழ் நாடே வேழ வேந்தர் பகையை முறிக்கும் வெற்றித் தமிழ் நாடே வில்லை வளைத்தே அறத்தை நிமிர்த்தும் வீரத் தமிழ் நாடே!