பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 31 ஒடி யுழைத்தவர் கூடி வாழ்ந்தே உயர்ந்த தமிழ் நாடே உழவுந் தொழிலும் பேணி வளர்த்தே உவந்த தமிழ் நாடே ஆடிப் பாடிக் கலைகள் வளர்க்கும் அழகுத் தமிழ் நாடே அறிவுப் பணியில் நிறைவு கண்ட அன்புத் தமிழ் நாடே! தொகை தொகை யாகப் பாடல் எழுதித் தொகுத்த தமிழ் நாடே தோகையர் காதல் போற்றி வளர்த்த துளய தமிழ் நாடே வகை வகையாகக் காவிய நூல்கள் வரைந்த தமிழ் நாடே வள்ளுவர் குறளே வையகந் தனக்கு வழங்கிய தமிழ் நாடே! தொகுத்த செல்வம் பிறருக் குதவத் துணையாம் தமிழ் நாடே! தொண்டு கிழவர்க் கென்றும் உயர்வு கொடுக்கும் தமிழ் நாடே! வகுத்த நெறியில் வழுவா திருக்கும் பண்புத் தமிழ்நாடே! வாழும் வாழ்வு சீரியதாக வளரும் தமிழ் நாடே! ாங்கள் பெரியார் பிறந்த மண்ணுய் இருக்குந் தமிழ் நாடே! இருளை விலக்கி ஒளியைக் கண்ட இன்பத் தமிழ் நாடே!