பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 35 மெய்யாக விழாக்கள்.பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் ! தென்றமிழில் வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப் பேசிடுமோர் கூட்டத் தாரும் இன்றமிழை வளர்க்கின்ருேம் யாங்க ளென்றே ஏமாந்த தமிழ்நாட்டார் முன்னே வந்து நின்றிருப்பார்; பூமாலை கைச்செண் டோடே நிகழ்த்திடுவார் வரவேற்புத் தமிழர் தாமே . பெண்கல்வி வேண்டுமென்றே ஒருவர் சொன்ஞல் பெரியவளாய் ஆகும்வரை படிப்ப தென்று தண்டமிழ்க்குப் பண்டிதர்கள் உரைவ குத்த தந்திரம்போல் மற்ருெருவர் விளக்கம் சொல்வார். கண்ணே நிகர் கல்வியினைக் கற்ப தற்கே கல்லூரி வருமந்தக் கன்னி தன்னை மண்டுதமிழ் மாணவரோ சுற்றி வந்து மனமயக்கம் கொண்டிடுவார் மான மின்றி ! தமிழ்நாட்டில் வானெவியை இயக்கு விக்கும் தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர் அமைத்ததனே அழைக்கின்ருர், இந்தி தன்னை அருமுயற்சி செய்திங்கே பரப்பு கின்ருர். சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச் சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார் நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானுர் !