பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாச்சியப்பன் தாய்போன்ற பெண்ளுெருத்தி தன்னைச் சுட்டித் தடித்தனமாய் அவள்வந்தாள் இவள்போ ளுளென் ருேயாமல் எழுதுவதும், இலக்க னத்தில் உள்ளபடி தானெழுது கின்ருே மென்று வாயாலே அடிப்பதுவும் சான்ருேர் சொல்லே மறுப்பதுவும் தொழிலான சிற்றி னத்தார் தாயான தமிழ்நாட்டின் விடுத லேக்கே தாமுழைக்க வந்ததுவாய்க் கூவு கின்ருர் ! ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேல் பார்ப்போன் அவசரத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனே விலக்கி வைப்பார் ! ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா ? ஈங்கிதனக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! அரைப்படிப்புக் காரரெல்லாம் தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் 1 திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்ருர் ! உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை யென்ருல் ஒதுங்குகின்ருர் நூற்பொருளில் திருத்தம் சொன்னல் கறைப்படுத்தி விட்டோமென் றலறு கின்ருர், ! காண்பதெல்லாம் விந்தைகளே! தமிழர் நாட்டில். ஏனென்று கேட்பதற்கோர் ஆளு மின்றி இருக்கின்ற காரணத்தால் தமிழர் நாட்டில் தானென்று திரிகின்ற போக்குக் கொண்டார் தலைகனத்துத் திரிகின்ற நிலைமை கண்டோம்.