பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவுக்குப் பொருந்தாத பழமைக் கருத்துக்களை இவர் அழகுறச் சாடுதலையும், புத்தம் புதிய கருத்துக்களே இடமறிந்து இனிதாகச் சேர்த்துத் தருதலையும் காண்போர் இந்நூலைப் பெரிதும் வரவேற்பர் என்பது உறுதி. திரு நாரா நாச்சியப்பன் சிறந்த கவிஞர் உள்ளம் படைத்தவர்; நிறைந்த கவித்துவம் வாய்ந்தவர். இவர் தொட்டனவெல்லாம் பாட்டாகித் தித்திக்கின்றன. இவர் வெற்றிமாலே சூடுதற்குரியர் என்பது என் துணிபு. அன்புள்ள சென்னே-5 w 15-12-59 அ. சிதம்பரநாதன்