பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 41 திருக்கோயில் தெய்வங்கள் பேணுத் தமிழை விருப்போடு கொள்ளவா வேண்டும் ?-சிரிப்போ(டு) உயிர்வாங்கும் செந்தேனே யொண்டமிழ்பின் ைேடி மயலாளுன் அப்பெரு மாள் ? உமைநத்தும் செஞ்சடையா ைேதிக் களிப்ப தமைவுற்ற ஆரியத்தை யன்ருே ?-சமைவுற்ற பொற்சிலையே தேவாரம் போற்றி நடமிட்டான் சிற்றம் பலத்தே சிவம் ! செந்தமிழை விட்டுச் சிவனும் பெருமாளும் இந்தநாள் வேற்றுமொழி யேற்றதேன் ?-மந்தநகை மின்னளே சாதி வகுத்திட்ட மேற்படியார் இந்நாளே செய்தா ரிடர் ! செந்தமிழர் நாட்டுத் திருக்கோயில் அத்தனையும் எந்தநாள் இன்தமிழை ஏற்குமோ ? -அந்தகமாய்ப் பக்திசெயும் அன்பர் பகுத்தறிவை மேற்கொண்டால் அக்கணமே மானே அறி ! பகுத்தறிவை மேற்கொண்டால் பக்தி மறைந்து மிகுத்திங்கு நாத்திகமோ மேவும் ? -தொகுத்த மலர்க்கொண்டைக் காரிகையே வாலறிவன் நற்ருள் தலைக்கொண்டால் நாத்திகமா சாற்று !