நன்றியுரை நாடகக்கலை நூலை ஏற்கனவே சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1972-73ஆம் ஆண்டுக்குப் பட்டப் படிப்பு மாணவர்களுக்குத் துணைப்பாட் நூலாக வைக்கப் பெற்றது. அதேபோன்று இப்போது மதுரைப் பல்கலைக் கழகம் இந்நூலைப் பட்டப்படிப்பு (அஞ்சல் வழிக் கல்வி) மாணவர் களுக்கு இவ்வாண்டில் துணைப்பாட நூலாக வைத்து சிறப்பித்துள்ளது. இதற்கு அவ்வை சண்முகம் அவர்களின் மகன் என்ற முறையில் என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கட்கும் ஆட்சிக் குழுவினருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியைச் செலுத்திக் கொள்கிறேன். இந்நூலின் மூன்ரும் பதிப்பைப் போன்று இப்போதும் எங்கள் பதிப்பகம் வெளியிடும் இந் நான்காம் பதிப்புக்கும் விற்பனை உரிமை பெற்ற பாரிநிலையம் உரிமையாளர் திரு க. அ. செல்லப்பன் அவர்கட்கும், நூலினை அச்சுப்பிழை யின்றி, திருத்தம் செய்து கொடுத்தவரும் தந்தையாருடன் எழுத்துப் பணியில் அவ்வப்போது உதவியவருமான கெழுதகை நண்பர் கவிஞர் ஆர். சி. தமிழன்பன் அவர்கட்கும் நூலினை வழக்கம்போல் அழகுபட அச்சிட்டுக் கொடுத்த மூவேந்தர் அச்சகம் திரு. முத்து அவர்கட்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் வளர்க நாடகக்கலை சென்னை-86 23–1–1981 டி. கே. எஸ். கலைவாணன் பொருளடக்கம் பக்கம் 1. தமிழ் நாடக வரலாறு 9 2. நடிப்புக் கலை 67 நாடகத்தில் பிரசார 111
பக்கம்:நாடகக் கலை 1.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை