பக்கம்:நாடகக் கலை 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 நாடகக் க9ல அப்புறம் கருத்துகளைத் தாராளமாகச் சொல்லட்டும். பாத்திரத்தின் தன்மையைக் கொன்றுவிட்டு மக்களின் மதிப்பைச் சம்பாதிக்க முயல்வது, உயிரைப் போக்கி விட்டுப் பிணத்திற்கு அலங்காரம் செய்வதுபோலத் தான் இருக்கும். நாடகக் கலையைப் பொறுத்தவரை, புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது மக்களின் கைதட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது. பார்ப்பவர் உள்ளத்திலே பாய்ந்து கம் பண்புக்கொத்த முறையில் அது செயலாக வெளிப்பட வேண்டும். அதுவே மறுமலர்ச்சி. கலைஞனும் அரசியல்வாதியும் மற்றென்று இங்கே சொல்ல விரும்புகிறேன். கலைஞன் அரசியல்வாதி அல்லன். அரசியல்வாதியாகக் கலைஞன் இருக்கலாம். ஆனல், அவன் கலையைக் கையாளும்போது கலைஞனுகவே காட்சி அளிக்க வேண்டும். அரசியல்வாதி எதிர்க்கட்சிக்காரனை ஏசிப் பேசுவான். கலைஞன் அந்த வழியை மேடையில் பின் பற்றக் கூடாது. கண்ட கண்ட இடங்களில் கட்சிப் பிரசாரங்களை அரசியல்வாதி புகுத்தலாம்; கலைஞன் அப்படிச் செய்தல் கூடாது. அப்படிச் செய்தால் கலை மறைந்துவிடும். பிரசாரம் மட்டுமே கிற்கும். எப்போதுமே ஆக்க வழியில் செல்வதுதான் கலை. கலைஞன் ஆக்கத்திற்காகவே வாழ்கிருன்: அழிவிற் காக அல்ல. கலையில் அழிவுப்பாதையே கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/156&oldid=1322702" இலிருந்து மீள்விக்கப்பட்டது