பக்கம்:நாடகக் கலை 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாடகக் கலை கலித்தொகை, குறுக்தொகை, நற்றிணை, TNಲ್ಜ யார், திருக்குறள், பழமொழிகள் இவையெல்லாம் சுவாமிகளின் பாடல்களிலும் வசனங்களிலும் பரந்து கிடப்பதைக் காணலாம். சங்க நூல்கள் அத்தனையும் அவருக்கு மனப்பாடம். சுவாமிகளின் எந்த நாடகத்தை யெடுத்துக்கொண் டாலும் அதிலே தருமநெறி வலியுறுத்தப் பெற் றிருக்கும். சுவாமிகள் உணர்ச்சிக் கடல்; மிகச் சிறந்த நடிகராக இருந்து சபையோரை உணர்ச்சி வசப்படுத் தியவர். எனவே அவருடைய நாடகப் பாடல்களில் உணர்ச்சி முதன்மை பெற்றிருக்கும். ஒரே நாள் இரவில், நான்கு மணி நேரம் நடை பெறக்கூடிய ஒரு நாடகம் முழுவதையும், அடித்தல் திருத்தல் இல்லாமல், பாடல்கள் வசனங்களோடு எழுதி முடித்த மகத்தான தெய்விக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் ங்ாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்க்ள்’ எனறு சொல்லலாம். இந்த நாடகங்களே சென்ற முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் நாடக மேடைக் கலையை அழிந்து போகாமல் காப் பாற்றி வந்துள்ளன. நாடக உலகின் இமயம் காலஞ்சென்ற கலைவாணர் என். எஸ். கிருஷ்ணின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற சுவாமிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/44&oldid=1322575" இலிருந்து மீள்விக்கப்பட்டது