பக்கம்:நாடகக் கலை 2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

வழி; அறவழி. எந்தக் கருத்தையும் இனிமையாக பண் போடு அன்போடு மக்களுக்கு எடுத்துச் சொல்லி மன மாற்றம் ஏற்படும்படியாகச் செய்வதுதான் கலைவழி. அதுதான் பயன் தரும் வழி அந்த வழியில் செல்வதே கலைஞனின் கடமை.

கத்தியை உபயோகிக்கும் போது எப்படிக் கவனமாக உபயோகிக்கிருேமோ அப்படியே கலையின் மூலம் நாவை உபயோகிக்கும் .போதும் கவனமாக உபயோகிக்க வேண்டும். கத்தியைவிடக் கூர்மை யானது நாவு , நாவிலிருந்து வரும் வார்த்தைகள் மிகுந்த ஆற்றலுடையவை தீயினுற் சுட்டபுண் ஆறி விடும்; நாவினுற் சுட்ட வடு ஆருது. கத்தி உடலை மட்டுமே புண்படுத்தும் வார்த்தைகள் உள்ளத் தைப் புண்படுத்தும். கலையின் மூலம் சொல்லப் 'படும் கரு த் துக் கள் உள்ளத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தல் கூடாது. வாளைக் கொண்டு சாதிப்பதைவிட வார்த்தைகளைக் கொண்டு போதிப்பது மேல் ' என்பது அறிஞர்கள் கருத்து. எனவே, நாடகத்தைக் கட்சிப் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தும் எவரும் கலைவழியாகிய அன்பு வழியி லேயே அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் நாம் விரும்பும் மனமாற்றத்தை மக்களிடத்திலே காணமுடியும்.

நாடகக் கலையின் மூலம் நல்ல செயல்களைத் தூண்ட பெரு முயற்சியெடுத்துக் கொள்ளவேண்டும். ஆனல், தீமைகளை எளிதில் விதைத்துவிடலாம். உயிரின் உற்பத்திதானே கஷ்டம் , அழிவு வேலை செய்வதற்குப் பெரிய கலைத்திறன் வேண்டியதில்லை யல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/125&oldid=1322496" இலிருந்து மீள்விக்கப்பட்டது