பக்கம்:நாடகக் கலை 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

கைகேயி என்ன சாதாரணப் படைப்பா? கணவன் தயரதன், மகன் பரதன் முதலிய எல்லோராலும் இவ் வாறு வெறுத்து ஒதுக்கப்பட்ட கைகேயியை, இறுதி 'யில் இராமன் எவ்வாறு போற்றுகிருன்!... -

போர் முடிந்தது; தயரதன் தெய்வ வடிவிலே வந்து திருமகனைச் சந்திக்கிருன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்கிருன் தந்தை. தந்தையே, தங்களைக் கண்டதே போதும். இதைவிட வேறு என்ன வேண்டும்' என்கிருன் இராமன். பின்னும் பரிவோடு "உனக்கு வேண்டியதைக் கேள்' என்கிருன் தயரதன். இந்த இடத்திலே இராமன் வாக்கால் வெளிப்படுத்தும் சொற்கள் கம்பரை ஒரு மிகப் பெரிய நாடக ஆசிரிய ராக நமக்குக் காட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடலைப் பாருங்கள்.

ஆயினும் உனக்கமைந்த தொன்றுரையென அடிகள், தீயளென்று நீ துறந்த என்தெய்வமும் மகனும் தாயும் தம்பியும் ஆம்வரம் தருகெனத் தாழ்ந்தான் வாய்திறந்தெழுந் தார்த்தன உயிரெலாம் வழுத்தி ’

தயரதன் அவ்வாறு கேட்டவுடனே 'தீயவ ளென்று நீ கை விட்டாயே, அந்த என் தெய்வமாகிய கைகேயியும் அவள் திருமகனும் எனக்கு மீண்டும் தாயும், தம்பியுமாகும்படியான ஒரு வரத்தைத் தர வேண்டும்' என்று வணங்கினுைம் இராமன். உடனே இராமனை மனிதர் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை கம்பர்; தேவர்கள் வாழ்த்தியதாகச் சொல்லவில்லை; உயிர்க்குலங்கள் எல்லாம் வாய் திறந்து எழுந்து ஆரவாரம் செய்ததாகச் சொல்லுகிருர். என்ன அற்புதக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/133&oldid=1322504" இலிருந்து மீள்விக்கப்பட்டது